திண்டிவனம்: டாடா தொழிற்சாலையை அமைத்தால் நெல்லை, தூத்துக்குடி வட்டாரம் முழுவதும் பாலைவனமாக மாறிவிடும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
தூத்துக்குடி மாவட்டம் ராதாபுரம், சாத்தான்குளம் தொகுதிகளுக்கு சென்று மக்களிடம் பாமக சார்பில் கருத்து கேட்டது தொடர்பான அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கை முதல்வரிடம் வழங்கப்பட உள்ளது.
கனிமங்களை பிரித்து எடுப்பதால் அந்த பகுதி பாலைவனமாக மாறிவிடும் என்பதில் எள்ளளவு கூட அறிவியல் உண்மை இல்லை என கருணாநிதி அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிவியல் உண்மையை நான் மறுக்கிறேன். இதில் உண்மை இருக்கிறது.
திருச்செந்தூர் வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரின் அறிக்கைகளின்படி, மாவட்ட ஆட்சியர் பழனியாண்டி கடந்த 26-09-2006 அன்று தமிழக அரசுக்கு ஒரு அறிக்கை அனுப்பியுள்ளார். அப்பகுதி மக்களின் அச்சத்தையும், உண்மை நிலையையும் உணர்த்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் பழனியாண்டி இந்த அறிக்கையினை 16 தலைப்புகளில் அனுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில், இந்த பிரச்சினை தொடர்பாக கடந்த 2005ல் பல்வேறு அரசு அலுவலகங்கள் 9 கடிதங்களை அரசின் கவனத்துக்கு அனுப்பியுள்ளன.
அதில் மிகவும் முக்கியமானது, அப்பகுதியில் 8 மீட்டர் ஆழத்திற்கு சுரங்க பணிகளை மேற்கொண்டால் அப்பகுதிகளில் வேளாண்மை முற்றிலுமாக அழிந்து பாலைவனமாக மாறிவிடும்.
இதனால் அப்பகுதி முழுவதும் பஞ்சம் ஏற்பட்டு, மக்கள் அனைவரும் அகதிகளாக செல்லும் நிலை ஏற்படும் எனவும், வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் அறிக்கைகள் குறிப்பிடுவதாக அரசுக்கு மாவட்ட ஆட்சியர் அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பாலைவனமாக ஆகிவிடும் என்ற கருத்து வேண்டும் என்றே சொல்லப்படுவது அல்ல.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் மூலம் கடந்த 04-01-2006ல் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் 6 மீட்டர் ஆழத்திற்கு மண் எடுப்பதால் தாவர இனங்கள் மற்றும் மரம், செடி, கொடிகளுக்கு அழிவு ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தேரி பகுதியை மேம்படுத்துவதற்காக தமிழக அரசின் வேளாண்துறை மூலம் 1978-79ல் காற்று அரிப்பு கட்டுப்பாட்டு திட்டம் ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. டேனிடா என்ற அமைப்பின் மூலம் 1993-94ம் ஆண்டில் 6.25 கோடி செலவிலும், 2வது கட்டமாக கடந்த 2004ல் 41.72கோடி செலவிலும், ஒருங்கிணைந்த நீர் பயன்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்மூலம் பெருமளவு மரம் வளர்ப்பதும், நீர்வள ஆதாரத்தினை மேம்படுத்துவதமான பணிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி பசுமையாக மாறியுள்ளது.
இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பனையேறும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வேலை இல்லாத நாட்களில் இங்கு வந்து பணிபுரிகின்றனர்.
எனவே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் டாடா நிறுவனத்தின் டைட்டானியம் தொழிற்சாலை அங்கு அமைவது ஏற்றது இல்லை என்பதே பாமகவின் கருத்தாகும் என்றார் ராமதாஸ்.
சட்டத்தை மீறியவர்களை காப்பாற்றுவதா?-ராமதாஸ்
சென்னை:சென்னையில் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டத்தை மறு பரிசீலனை செய்ய தமிழக அரசு மனு தாக்கல்செய்ய முடிவெடுத்துள்ளது. இது சட்டத்தை மீறியவர்களை அரசு காப்பாற்றுவதற்கு சமம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,
சென்னையில் விதிகளை மீறி 75,000 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றைஇடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் விஷயத்தில் எந்த கருணையும் காட்ட கூடாது என தெரிவித்துள்ளது.
ஆனால், தமிழக அரசு அவர்களுக்கு ஆதரவாக மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. சட்டத்தை திருத்துவதுகுறித்து ஆராய ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் தலைமையில்குழுவையும் அமைத்துள்ளது.
சட்டவிதிகளை மீறியவர்களை அரசே காப்பாற்றுவதா. இந்த நடவடிக்கையை அரசு
கைவிட வேண்டும்.
அவர் கூறுகையில்,
சென்னையில் விதிகளை மீறி 75,000 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றைஇடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் விஷயத்தில் எந்த கருணையும் காட்ட கூடாது என தெரிவித்துள்ளது.
ஆனால், தமிழக அரசு அவர்களுக்கு ஆதரவாக மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. சட்டத்தை திருத்துவதுகுறித்து ஆராய ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மோகன் தலைமையில்குழுவையும் அமைத்துள்ளது.
சட்டவிதிகளை மீறியவர்களை அரசே காப்பாற்றுவதா. இந்த நடவடிக்கையை அரசு
கைவிட வேண்டும்.
பத்திரிக்கைகளின் ஓரவஞ்சனை:

இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரு காலத்தில் திரைப்பட துறையை வைத்துத்தான் ஆட்சியை பிடித்துள்ளன, ஆனால் திரைப்பட துறையையே சாராமல் மக்களின் மன நிலையால் மட்டுமே இதுவரையில் வளர்ந்து கொண்டுவரும் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி.
ஒரு நாளெடு(தினமலர் - 7-05-௨2004 பாண்டிச்சேரி) பா.ம.க வைப்பற்றி கணக்கு எழுதுகிறது எப்படி,96 ல் தனித்து போட்டி இட்டு = 3.84 சதவீத ஓட்டும்,98 ல் அ.இ.அ.தி.மு.க வுடன் சேர்ந்து = 6.05 % ஓட்டும்=அதாவது 2.21% அதிகம்,99 ல் தி.மு.க வுடன் சேர்ந்து 8.21% ஓட்டும் அதாவது 4.37% அதிகம் இப்படி கணக்கு போட்டு அதனாலதான் அணி மாறுது அப்படின்னு கணக்கு எழுதுது.
மக்கள் எல்லாரும் மறந்தாப்புல வோட்டு போடறாங்க அதனால வளருது ஆனா ,பாட்டாளிமக்கள் கட்சிக்கு,வெறும் 4% தான் அப்படின்னு கணக்கு எழுதுது.
இதே கணக்கை இவங்க ஏன் இப்படி எடுத்துக்கொள்ளக்கூடாது, ஆரம்பத்தில தினமலர் 100 பிரதிகள் வித்தது. 5 வருசம் கழித்து 1 லட்சம் பிரதிகள் வித்ததுஇப்போது 75லட்சம் விக்குது ,அப்ப உள்ள நிலையிலேயே இப்பவும் 100 பிரதிதான்தினமலரொட மதிப்பு , மத்தவங்க எல்லாம் மறந்தாப்புல பிரதிகள் வாங்கிடறாங்கனு எடுத்துக்க முடியுமா?எப்படி உன் பேப்பரை மக்கள் வாங்குகிறார்களோ அதைப்போலத்தான் பா.ம.க வும்மக்களுக்கு பிடிச்சிருக்கு,
இந்த அணி அந்த அணின்னு இல்ல எங்க இருந்தாலும் பா.ம.க வுக்கு மவுசு அதிகம் தான்.
உனது பேப்பரில் நீயும் 2003ம் ஆண்டுமுதல் இன்றுவரையில் வன்னியர்களைப்பற்றியும்,அவர்களின் உரிமைக்காக நடந்த "வன்னியப்புரட்சி" யாம் "இடஒதுக்கீட்டு போராட்டத்தை"யும் டாக்டர் அய்யா அவர்களைப் பற்றியும் மிகக் கேவலமாக எழுதிக்கொண்டுதான் இருக்கிறாய்.
மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல கடந்த இரு தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் பா.ம.க விற்கு நல்ல முடிவையே அளித்துள்ளார்கள்.
இருந்தும் நீ திருந்த வில்லை?
எத்தனை மக்கள் போராட்டம் நடத்தியுள்ளார் டாக்டர் அய்யா:
(உ.ம்)
1. கள்ளுக்கடை மறியல்(டாஸ்மாக் கிற்கு பூட்டு)
2. சிகரெட் பழக்கத்திற்கு தடை
3. சின்னத்திரையில் பெண்களை கேவலப்படுத்தும் நிகழ்ச்சிகளை ஓளிபரப்பக்கூடாது என்று போராடியது(ஏப்ரல் 26 2005 மெமோரியல் அரங்கம் சென்னை).
4. விளம்பர பலகைகளில் தமிழும் இருக்க வேண்டும் (கறுப்பு மை இட்டு அழித்த கட்சி)
5. மழை நீரை சேமிக்க குளம் குட்டைகளை தூர் வாரிய கட்சி
6. கோயில்களில் தமிழ் வழிபாடு இருக்க செய்ய போராடியது
7. தமிழிசையை பரப்பிய முதல் கட்சி "பொங்கு தமிழ் வளர்ச்சிக் கட்டளை"
8. நுழைவுத்தேர்வை ரத்து செய்ய போராடியது
எத்தனை போராட்டம் நடத்தி உள்ளார்கள் எதையாவது பாராட்டிஉள்ளாயா?
ஏன் வன்னியன் ஒருவன் பேர் எடுத்துவிடக்கூடாது? என்ற கெட்ட எண்ணம் தானே?
நல்ல கருத்துக்களை பரப்பவேண்டிய உன் போல் உள்ள பிராமணர்கள் செய்யும் தவறால்ஓட்டு மொத்த பிராமண சமூகத்தையே தவறாக நினைக்க வேண்டியுள்ளது
ஆனால் நாங்கள் உன் போன்ற பிராமணர்களின் நல்ல கருத்துக்கு மதிப்பளிக்ககூடியவர்கள்தாம்.
ஒரு நாளெடு(தினமலர் - 7-05-௨2004 பாண்டிச்சேரி) பா.ம.க வைப்பற்றி கணக்கு எழுதுகிறது எப்படி,96 ல் தனித்து போட்டி இட்டு = 3.84 சதவீத ஓட்டும்,98 ல் அ.இ.அ.தி.மு.க வுடன் சேர்ந்து = 6.05 % ஓட்டும்=அதாவது 2.21% அதிகம்,99 ல் தி.மு.க வுடன் சேர்ந்து 8.21% ஓட்டும் அதாவது 4.37% அதிகம் இப்படி கணக்கு போட்டு அதனாலதான் அணி மாறுது அப்படின்னு கணக்கு எழுதுது.
மக்கள் எல்லாரும் மறந்தாப்புல வோட்டு போடறாங்க அதனால வளருது ஆனா ,பாட்டாளிமக்கள் கட்சிக்கு,வெறும் 4% தான் அப்படின்னு கணக்கு எழுதுது.
இதே கணக்கை இவங்க ஏன் இப்படி எடுத்துக்கொள்ளக்கூடாது, ஆரம்பத்தில தினமலர் 100 பிரதிகள் வித்தது. 5 வருசம் கழித்து 1 லட்சம் பிரதிகள் வித்ததுஇப்போது 75லட்சம் விக்குது ,அப்ப உள்ள நிலையிலேயே இப்பவும் 100 பிரதிதான்தினமலரொட மதிப்பு , மத்தவங்க எல்லாம் மறந்தாப்புல பிரதிகள் வாங்கிடறாங்கனு எடுத்துக்க முடியுமா?எப்படி உன் பேப்பரை மக்கள் வாங்குகிறார்களோ அதைப்போலத்தான் பா.ம.க வும்மக்களுக்கு பிடிச்சிருக்கு,
இந்த அணி அந்த அணின்னு இல்ல எங்க இருந்தாலும் பா.ம.க வுக்கு மவுசு அதிகம் தான்.
உனது பேப்பரில் நீயும் 2003ம் ஆண்டுமுதல் இன்றுவரையில் வன்னியர்களைப்பற்றியும்,அவர்களின் உரிமைக்காக நடந்த "வன்னியப்புரட்சி" யாம் "இடஒதுக்கீட்டு போராட்டத்தை"யும் டாக்டர் அய்யா அவர்களைப் பற்றியும் மிகக் கேவலமாக எழுதிக்கொண்டுதான் இருக்கிறாய்.
மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல கடந்த இரு தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் பா.ம.க விற்கு நல்ல முடிவையே அளித்துள்ளார்கள்.
இருந்தும் நீ திருந்த வில்லை?
எத்தனை மக்கள் போராட்டம் நடத்தியுள்ளார் டாக்டர் அய்யா:
(உ.ம்)
1. கள்ளுக்கடை மறியல்(டாஸ்மாக் கிற்கு பூட்டு)
2. சிகரெட் பழக்கத்திற்கு தடை
3. சின்னத்திரையில் பெண்களை கேவலப்படுத்தும் நிகழ்ச்சிகளை ஓளிபரப்பக்கூடாது என்று போராடியது(ஏப்ரல் 26 2005 மெமோரியல் அரங்கம் சென்னை).
4. விளம்பர பலகைகளில் தமிழும் இருக்க வேண்டும் (கறுப்பு மை இட்டு அழித்த கட்சி)
5. மழை நீரை சேமிக்க குளம் குட்டைகளை தூர் வாரிய கட்சி
6. கோயில்களில் தமிழ் வழிபாடு இருக்க செய்ய போராடியது
7. தமிழிசையை பரப்பிய முதல் கட்சி "பொங்கு தமிழ் வளர்ச்சிக் கட்டளை"
8. நுழைவுத்தேர்வை ரத்து செய்ய போராடியது
எத்தனை போராட்டம் நடத்தி உள்ளார்கள் எதையாவது பாராட்டிஉள்ளாயா?
ஏன் வன்னியன் ஒருவன் பேர் எடுத்துவிடக்கூடாது? என்ற கெட்ட எண்ணம் தானே?
நல்ல கருத்துக்களை பரப்பவேண்டிய உன் போல் உள்ள பிராமணர்கள் செய்யும் தவறால்ஓட்டு மொத்த பிராமண சமூகத்தையே தவறாக நினைக்க வேண்டியுள்ளது
ஆனால் நாங்கள் உன் போன்ற பிராமணர்களின் நல்ல கருத்துக்கு மதிப்பளிக்ககூடியவர்கள்தாம்.
Subscribe to:
Comments (Atom)